ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே நிலவி வரும் போர்ச் சூழலில், ரஷ்யாவிடமிருந்து ஈரானுக்கு இராணுவ அல்லது புலனாய்வு உதவிகள் கிடைப்பதாக வெளியாகும் செய்திகளை ரஷ்யாவுக்கான ஈரானிய தூதுவர் காசிம் ஜலாலி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
ஈரானுக்கு ரஷ்யா உளவுத் தகவல்களை வழங்குவதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை என்றும், இதனை மேற்குலக நாடுகளே ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ரஷ்யாவுடன் தற்போது நடைமுறையில் உள்ள ஒப்பந்தங்கள் அனைத்தும் போருக்கு முன்னரே கையெழுத்திடப்பட்டவை என்றும், அவற்றுக்கும் தற்போதைய மோதலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதேவேளை, உலக நாடுகளின் கவனத்தைப் பெற்றுள்ள ஹோர்முஸ் நீரிணை ஊடான போக்குவரத்து குறித்துப் பேசிய அவர், அந்த நீர்ப்பரப்பு இப்போது ஒரு புதிய சட்ட முறைமையின் கீழ் நிர்வகிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
