அஹுங்கல்ல, கல்பொக்க பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் 19 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அஹுங்கல்ல காவல் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்ப்பின்போதே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரகசிய தகவலுக்கு அமைய காவல்துறை சுற்றிவளைப்பில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
