இணையம் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெற்று வரும் நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறித்த எச்சரிக்கையை இலங்கை காவல்துறை விடுத்துள்ளது.
டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகக் கணக்குகள் மற்றும் பல்வேறு இணையத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய மோசடிகளில் ஈடுபடுவோரைக் கைது செய்யும் நோக்கில் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் காவல்துறை மா அதிபரால் விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசடிகள் தொடர்பான தகவல்களைக் கணினி குற்ற விசாரணைப் பிரிவின் 011 2300 756 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அறிவிக்க முடியும் எனக் காவல்துறை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
