யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் உள்ள நீர்தடாகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை 3:00 மணியளவில் குடும்பத்துடன் நீராடச் சென்ற சிறுவன் நீரில் ழூழ்கி பரிதாபமாக உரியிழந்துள்ளார்.
சிறு வயதில் தந்தையை இழந்த குறித்த சிறுவன் தாயாரின் அரவணைப்பில் வளர்ந்து வந்த நிலையில் இந்த துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறை புலோலி மேற்கு பகுதியைச் சேர்ந்த திலீபன் சந்தோஷ் வயது 16. என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்
சடலம் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் உடற் கூற்று சோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது
மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்
