ஏ9 வீதியில் கொக்காவிலுக்கும் முறுகண்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் இனறு மாலை ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியாகியதுடன் மேலும் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள்.
கார் ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதிய விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த ஒருவரே உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு அப்பகுதிக்கு பொலிசார் சென்றுள்ளதாகத் தெரியவருகின்றது.
