மட்டக்களப்பு மாவட்டத்தின் இன்று(14) மாலை தொடக்கம் இடியுடன் கூடிய கடும் மழைபெய்துவருகின்றது.
மட்டக்களப்பில் பெய்துவரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு நகரின் பல்வேறு பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதை காணமுடிகின்றது.
கடந்த சில தினங்களாக நீடித்த மழையுடனான காலநிலை ஓரளவு குறைந்திருந்த நிலையில் இன்று மாலை மீண்டும் கடும் மழை பெய்துவருகின்றது.
கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக சில பகுதிகளின் தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியிருந்த நிலையில் மீண்டும் இன்று மாலை தொடக்கம் மழைபெய்துவருகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்துவருவதன் காரணமாக அவதானமாக செயற்படுமாறு வானிலை அவதான நிலையத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



