டிஜிட்டல் மோட்டார் வாகன காப்புறுதி அட்டைகளை (Digital Motor Insurance Cards) வழங்குவது தொடர்பாக காவல்துறையினரால் விசேட அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, இலங்கை காப்பீட்டு சங்கம் மற்றும் காப்பீட்டுத் துறை சார்ந்த ஏனைய தரப்பினர் இணைந்து மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைய டிஜிட்டல் காப்புறுதி அட்டைகள் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன காப்புறுதிப் பத்திரங்களுக்குப் பதிலாக டிஜிட்டல் காப்புறுதி அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்றுள்ள இந்த டிஜிட்டல் அட்டைகள் மூலம், காப்புறுதிச் சான்றுகளை இனி டிஜிட்டல் அட்டையாகவோ அல்லது காப்புறுதி நிறுவனங்களின் கைபேசி செயலி மூலமாகவோ பெற்றுக்கொள்ள முடியும்.
எனினும், தேவைப்படும் வாடிக்கையாளர்கள் மட்டும் கோரிக்கையின் அடிப்படையில் அச்சுப் பிரதியினைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
